tamil cinema news: August 2010

Latest Stories

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

    Popular Posts

    Powered by Blogger.

Recently Comments


News

News

Posted in: , , , | Tuesday, August 24, 2010

எந்திரன் ரிலீஸுக்கு முன்பே, ரசிகர்களுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சியைத் தரத் தயாராகிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி. நாம் முன்பே சொன்னது போல, சத்யா மூவீஸுக்கு அடுத்த படம் செய்கிறார். இப்போதைக்கு பாட்ஷா -2 என்று படத்துக்கு தலைப்பு வைத்திருந்தாலும், பாட்ஷாவுக்கும் இந்தப் புதிய படத்துக்கும் தொடர்பு ஒன்றுமில்லையாம்.

பாட்ஷாவுக்கு நிகரான அனல் பறக்கும் ஆக்ஷன் கதை என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சத்யா மூவீஸ் அலுவலகத்தில் தினசரி கதை விவாதம், டெக்னீஷியன்கள் தேர்வு என படு பரபரப்பாக உள்ளனர்.

விசாரித்தால் முன்பு மாதிரி அவசரமாக மறுக்காமல், 'படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத்தானே போகிறார்கள்... கொஞ்சம் பொறுங்கள்' என்கிறார்கள் தயாரிப்பாளர் ஆர் எம் வீரப்பனின் நெருங்கிய உறவினர்கள்.

சில மாதங்களுக்கு முன்பு ஆர்.எம்.வீரப்பன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட ரஜினி, 'என்னால் பலன் அடைந்தவர் பலர்; நஷ்டமடைந்த சிலரில் ஆர்.எம்.வீரப்பனும் ஒருவர். 'பாட்ஷா' போன்ற படத்தை ஆர்.எம்.வீரப்பன்தான் தயாரிக்க முடியும்...' என்று பேசினார்.

அதைத் தொடர்ந்துதான் இந்தப் புதிய பட வேலைகள் சுறுசுறுப்பாகியுள்ளன. எந்திரன் படத்தின் ஆடியோ ரிலீஸ், டப்பிங் வேலைகள் என பிஸியாக இருந்த ரஜினி ஆரம்பத்தில் பாட்ஷா-2 படத்துக்கான கதை விவாதத்தில் பங்கேற்கவில்லை.

இப்போது, எந்திரன் படத்தின் அனைத்தும் வேலைகளும் முடிவடைந்துவிட்டதால் ரஜினியும் கதை விவாத்தில் கலந்து கொண்டாராம்.

இயக்குநர் யார் என்பதை மட்டும் பொத்திப் பொத்தி வைக்கிறார்கள். ஹரிதான் இயக்குகிறார் என்று முன்பே செய்தி [^] கசிந்தது. அப்போது அதை அவசரமாக மறுத்தார் ஹரி. ஆனால் ரஜினியின் சாய்ஸ் ஹரிதான் என்கிறார்கள். இதற்கு சத்யா மூவீஸும் சம்மதம் சொல்லியிருக்கிறது. இரு முறை சத்யா மூவீஸ் அலுவலகத்துக்கு ஹரி வந்ததையும் உறுதிப்படுத்துகிறார்கள்.

எந்திரன் படம் முடிந்ததும் ரசிகர்களைச் சந்திப்பதாக உறுதி கூறியிருந்தார் ரஜினி. மகள் சௌந்தர்யா திருமணம் [^], சுல்தான் க்ளைமாக்ஸ் பணிகள் மற்றும் இமயமலைப் பயணத்தை முடித்துக் கொண்டு ரசிகர்களைச் சந்திக்கும் ரஜினி, அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் தனது முடிவை அறிவிப்பார் என்றும், அதே நேரம் புதிய படத்தையும் நடித்து முடிப்பார் என்றும் ராகவேந்திரா மண்டப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தனை காலமும் வேறு மொழிகளில் நடிக்கிறீர்களா என்று யார் கேட்டாலும், 'அய்யோ நான் தமிழனுங்ணா' என கவுண்டர் பாணியில் கூறிவந்த விஜய் [^], இப்போது அந்த தமிழன் முகமூடியை கழட்டி வைத்துவிட்டு தெலுங்கு [^]ப் பக்கமும் எட்டிப் பார்க்க ஆர்வம் காட்டுகிறாராம் (இது சுறா எஃபெக்டா என்பதெல்லாம் நமக்குத் தெரியாதுங்னா!)

ஆம்... முதல் முறையாக ஒரு நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்கப் போகிறாராம் விஜய்.

அது த்ரீ இடியட்ஸின் தெலுங்கு ரீமேக். ஷங்கர் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படும் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் விஜய், ஆர்யா மற்றும் ஜீவா நடிக்கின்றனர். தெலுங்கில் விஜய் பாத்திரத்தில் மகேஷ்பாபு நடிப்பார் என்று முதலில் சொல்லப்பட்டது.

ஆனால், தெலுங்கிலும் விஜய்யே நடித்தால் என்ன? என்று அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தனது முன்னாள் சிஷ்யரான ஷங்கரிடம் (எஸ்ஏசியிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான் ஷங்கர்!) கேட்டுள்ளார். சற்று யோசித்த ஷங்கரிடம், இதற்கு முன் விஜய்யின் டப்பிங் படங்கள் சில தெலுங்கில் நன்றாக ஓடியதாக புள்ளி விவரமெல்லாம் சொன்னாராம் (விஜய் படங்களில் 90 சதவீதம் தெலுங்கு ரீமேக்தான் என்பது குறிப்பிடத்தக்கது!).

இப்போது ஒரு வழியாக விஜய்யை தெலுங்கில் அறிமுகப்படுத்தவும் ஒப்புக் கொண்டாராம் ஷங்கர்!

Samuthirakani is ready to start his next venture. “He has named the film ‘Poraali’ and his good friend Sasikumar will play an important role in it,” say circles close to the actor-director.

The relationship between Samuthirakani and Sasikumar dates back to ‘Subramaniapuram’ days, when the former played the pivotal ‘Chithappa’ role in the trendsetter movie directed by the latter.

After a while, Sasikumar played one of the protagonists in ‘Nadodigal’, directed by Samuthirakani. And now sources have it that Samuthirakani is doing a pivotal role in Sasikumar’s directorial venture ‘Nagaram’.

“This shows the depth of friendship shared by Sasikumar and Samuthirakani,” sources add. Samuthirakani’s last directorial venture was the Telugu film ‘Sambho Shiva Sambho’, which is a remake of ‘Nadodigal’.


3 இடியட்ஸ் ரீமேக்கை ஷங்கர் இயக்குவதாகவும் அதில் விஜய், ஆர்யா, ஜீவா மூவரும் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் [^] வந்தவண்ணம் உள்ளன.

ஆனால் சம்பந்தப்பட ஷங்கரோ, தயாரிப்பு நிறுவனமான ஜெமினியோ அல்லது நடிகர்களோ இதுவரை வாய் திறக்கவில்லை.

இந்த நிலையில் இந்தப் படம் குறித்து இன்னுமொரு செய்தி [^]... சுறா படத்துக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடி கட்டுகிறாராம் தமன்னா.

இந்த வாய்ப்புக்காக அவர் இயக்குநர் [^] ஷங்கரை ரொம்பவே படுத்தி எடுத்துவிட்டாராம். சம்பளக் குறைப்பு, எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கால்ஷீட் என வெகு தாராளத்தையும் ஷங்கரிடம் முன் வைக்க, அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.

தமன்னாவுடன் ஜோடி சேர்வதில் விஜய்க்கும் ஏக குஷியாம். பாத்ரூம் போகக் கூட செண்டிமென்ட் பார்க்கும் சினிமா [^] உலகில், தமன்னாவுடன் ஜோடி சேர்ந்த முதல் படமான சுறாவுக்கு நேர்ந்த கதி பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லையாம்!
Posted in: , , , | Friday, August 20, 2010
 
Vijay’s new film with Siddique has gone for a title change for the third time. When the film started had the MGR film title ‘Kaavalkaran’ hoping to cash in on the ever green popularity of MGR films. But when the original producers of the MGR movie Sathya Movies objected, the title was changed to ‘Kaaval Kaadhal’.

But the second title did not find encouraging reactions from even among Vijay fans. So now the title has been again changed to ‘Kaavalan’.

Another major development with the film according to sources is that director Shakthi Chidambaram has purchased the film lock stock and barrel including its negative rights. This sudden development has taken many by surprise. When most of the Tamil community is up in arms against the film because of Asin and the overseas business is in threat, Shakthi Chidambaram’s move is being viewed with mixed reaction.
Posted in: , , , | Monday, August 16, 2010