tamil cinema news: November 2011

Latest Stories

Subscription

You can subscribe to Red Carpet by e-mail address to receive news and updates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!

TOP 5 Most Popular Post

    Popular Posts

    Powered by Blogger.

Recently Comments


News

News


.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் துப்பாக்கி.விஜய்யின் ஜோடியாக கஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்துள்ளார் முருகதாஸ். இதற்காக கஜல் அகர்வால் தனது உடம்பை தயார் செய்து கொண்டு இருக்கும் வீடியோ காட்சி உங்கள் பார்வைக்கு.



Keywords: Tamil News, Tamilnadu Latest News, Online News Portal, Online Tamil News, Latest Cinema News, Tamilnadu Cinema News, online Cinema News, Cinema News, Cinema Trailers, Movie Trailers.
Posted in: | Wednesday, November 30, 2011
 
இரண்டு குழந்தைகள் ஒரு திறமை போட்டியில் நடனம் மற்றும் சில அற்புதம்


Keywords:  Cinema Trailers, Movie Trailers, Special Videos.
Posted in: |

.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படம் துப்பாக்கி. இந்த படத்திற்கான கதையையும் விஜய்யிடம் சொல்லி ஓ.கே. வாங்கிவிட்டார் முருகதாஸ். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது
இந்நிலையில் இந்த படத்தின் பெயரை தெலுங்கு இயக்குநர் ஜிங்கா ஹரிஷ் பாபு பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. உடனே முருகதாஸின் உதவியாளர்கள் தெலுங்கு இயக்குநரை தொடர்புகொண்டிருக்கிறார்கள். ‘துப்பாக்கி டைட்டிலை எங்களுக்கு தந்து விட முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார்கள்.


அதற்கு மறுத்துவிட்டார் இயக்குநர். துப்பாக்கி என்னும் பெயரில் அவர் எடுத்து வரும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பை பாதிக்கு மேல் முடித்துவிட்டதால் பெயரை இனிமேல் மாற்ற முடியாது.
பெயரை கட்டயமாக தர மட்டேன் என்று சொல்லிவிடாராம்.


இதைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநருக்கு பெரிய தொகையைக் கொடுத்து துப்பாக்கி என்னும் டைட்டிலை வாங்கிவிடலாமா அல்லது படத்திற்கு வேறு டைட்டில் வைக்கலாமா? என்று தீவிர யோசனையில் இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய்.
Posted in: |

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 கவனிக்கப்பட்ட உலக எய்ட்ஸ் தினம்,, எச்.. வி தொற்று பரவ காரணமாக எய்ட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அர்ப்பணிக்கப்பட்ட உள்ளது. இந்த நாளில் எச்.. வி / எய்ட்ஸ் இறந்தார் நபர்களுக்கு மரியாதை நினைவுச்சின்னங்கள் நடத்த பொதுவான உள்ளது. அரசு மற்றும் சுகாதார அதிகாரிகள் அடிக்கடி எய்ட்ஸ் தலைப்புகளில் உரைகள் அல்லது மன்றங்கள் மூலம், நிகழ்வுகளை கண்காணிக்க. 1995 முதல், அமெரிக்க ஜனாதிபதி உலக எய்ட்ஸ் தினம் ஒரு உத்தியோகபூர்வ பிரகடனம் செய்துள்ளது. மற்ற நாடுகளின் அரசாங்கங்கள் பின்தொடர்ந்தன, இதே போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு.

2007
இல் எய்ட்ஸ் 1981 மற்றும் 2007 இடையில் விட 25 மில்லியன் மக்கள் கொலை, மற்றும் 33.2 மில்லியன் மக்கள் உலகம் முழுவதும் அது வரலாற்றில் மிகவும் அழிவை தொற்றுநோய்களும் ஒரு தயாரித்தல், எச் ஐ வி வசிக்க. உலகின் பல பகுதிகளில் ரெட்ரோ வைரல் சிகிச்சை மற்றும் பராமரிப்பு சமீபத்திய, மேம்பட்ட அணுகல் போதிலும், எய்ட்ஸ் நோய் பற்றி 270,000 குழந்தைகள் இருந்தனர் தெரிவித்தது.

விழிகளை காயப்படுத்தும் துன்பங்கள் வேண்டும் , அப்போது தான் கண்ணீர் துடிக்கும் கைகள் யாருடுயது என்று தெரியும். பிரிவு என்பது யாராலும் தங்க முடியாத வலி, நினைவு என்பது யாராலும் திருட முடியாத பரிசு பொருள்.
Posted in: |

2ஜி ஊழல் வழக்கில் கைதாகி கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் இருந்தார் திமுக எம்பி கனிமொழி. கடந்த திங்கட்கிழமை டெல்லி உயர் நீதிமன்றம் கனிமொழிக்கு ஜாமீன் வழங்கியது

திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான திமுக எம்பி கனிமொழி தன்னுடன் சிறையில் இருந்த சக பெண் கைதிகளைத் தழுவி, அவர்களுக்கு சிறை கேன்டீனில் இனிப்பு வாங்கிக் கொடுத்து தனது மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

மேலும் சிறையில் பயன்படுத்திய டிவியை சக கைதிகளுக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். கனிமொழி திகாரை விட்டு வெளியே வரும்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி கனிமொழி சென்னைக்கு வருகிறார். அங்கு கனிமொழி வருகையை விழாவாகக் கொண்டாட திமுக பல ஏற்பாடுகள் செய்து வருகின்றது.
Posted in: , , , | Tuesday, November 29, 2011

ஆடுகளம் இயக்குனர் வெற்றிமாறன், அடுத்து சிம்பு வைத்து 'வடசென்னை' என்ற படத்தை இயக்குகிறார். 'ஆடுகளம்' ஹிட்டுக்குப் பிறகு இயக்கும் படம் என்பதால், இப்போதிருந்தே 'வடசென்னை' படத்திற்கு எதிர்பார்ப்பு அதிமாகியுள்ளது. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ரானா நடிக்கிறார். இதற்கிடையில் சிம்புக்கு ஜோடியாக ஆ‌ண்ட்‌ரியா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது உலக நாயகன் கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்து வரும் ஆ‌ண்ட்‌ரியா, வடசென்னை படத்திற்காக கால்ஷீட்டை ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது.
Posted in: |

Posted in: |




Keywords: Osthi Movie Trailer, Osthi Video Songs, Osthi
Posted in: |

பெட்ரோல் விலையை லீட்டருக்கு ரூ.1.02 குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் அதற்கேற்ப இந்தியாவில் பெற்றோல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விலைக் குறைப்பு நாளை 30ஆம் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருளர் சமுதாயப் பெண்கள் நான்குபேரை பாலியல் பலாக்காரம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து திருக்கோவிலூர் காவல்நிலைய போலீசார் 5 பேரை பணி இடை நீக்கம் செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மண்டபம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் வசிக்கும் பழங்குடியினத்தவர்களை திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்த போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற பெண்கள் நான்கு பேரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நீதி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த காவல்நிலையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர், தலைமைக்காவலர் உள்ளிட்ட 5 பேரை முதலமைச்சர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.



தமிழ்நாடு அரசின் சிறப்பு தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

உத்தரபிரதேச, குஜராத் மாநிலத்தின் சிறப்பு தூதராக அமிதாபச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தின் சிறப்பு தூதராக பொறுப்பு ஏற்கும்படி ஷாருக்கானை அணுகி இருக்கிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.ஆனால் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதேபோல் தமிழ்நாடு மாநில தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும். எனவே தமிழ்நாடு மாநிலத்தின் தூதராக பொறுப்பு ஏற்க ரஜினி முன்வர வேண்டும். அவரை தூதராக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார். கட்சியின் மாநில செயலாளர் கண்ணன்.
Posted in: | Monday, November 28, 2011

சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் அ‌ஜீத் நடிக்கக்கூடும் என்கிறார்கள்.

பில்லா 2 ல் கவனம் செலுத்தி வரும் அ‌ஜீத், அடுத்து விஜயா புரோடக்ஷன் நாகரெட்டி சார்பில் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.


இந்தப் படத்தை சிவா இயக்குகிறார். ஹீரோயினாக அனுஷ்கா நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
Posted in: |
தெலுங்கில் உருவாகும் புதிய படம் கப்பார் சிங். பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். இதில் முதலில் ஹீரோயினாக தேர்வானவர் ஸ்ருதி ஹாசன். ஆனால் தற்போது இலியானாவைத் தேடிப் போயுள்ளனராம்.

இந்தப் படம் வேறு எதுவுமல்ல, இந்தியில் வெளியான தபாங் படத்தின் ரீமேக்தான். தபாங் ஏற்கனவே தமிழில் சிம்பு நடிக்கும் ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக் ஆகிய உள்ளது. டிசம்பர் 8ம் தேதி திரைக்கு வருகிறது.

ஆனால் ஸ்ருதி ஹாசன் நீக்கத்தால் நடிகை அமலா பால் சந்தோஷமானதாக ஒரு தகவல் கூறுகிறது. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 3 படத்தில் முதலில் அமலா பால்தான் நடிப்பதாக இருந்தது. என்ன நடந்ததோ தெரியவில்லை அவருக்குப் பதில் ஸ்ருதி ஹாசன் நடித்தார். இந்த நிலையில், ஸ்ருதி ஹாசனுக்கு பட வாய்ப்பு தெலுங்கில் பறிபோன தகவல் அறிந்த அமலா பாலுக்கு ஹேப்பி நியூஸாக தெரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Posted in: |

தமிழில் சமீபத்தில்தான் முருகதாஸின் 7ஆம் அறிவு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்து விஜய்யை வைத்து ஒரு படம் செய்யவுள்ளார் முருகதாஸ்.

தமிழில் மாபெரும் ஹிட் ஆன படம் விஜயகாந்த் நடித்த ரமணா. அரசியலில் நுழைய நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்த விஜயகாந்த்துக்கு இநத்ப் படம் பெரும் பிரேக் கொடுத்தது.

பின்னர் இந்தப் படத்தை சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் தாகூர் என்ற பெயரில் இயக்கினார் முருகதாஸ். இப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. சிரஞ்சீவிக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது.

இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜாவை வைத்து இயக்கப் போகிறார் முருகதாஸ்.

Posted in: |

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் 3 படத்தில் அவரது தந்தையும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் 3 . தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிக்கும் இந்த படத்தில் வரும் 'ஒய் திஸ் கொலைவெறி டி' பாடல் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கேட்கிறது. யாரைப் பார்த்தாலும் ஒய் திஸ் கொலைவெறிப் பாட்டைத் தான் பாடுகிறார்கள். அந்த அளவுக்கு பிரபலமாகிவிட்டது.

அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கூட இந்த பாட்டைக் கேட்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்நிலையில் 3 படத்தில் தனது செல்ல மகளுக்காக ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் வரக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினி வேற நடித்தால் படம் நிச்சயம் சூப்பர் ஹிட் தான்.
Posted in: | Sunday, November 27, 2011

டிஜிட்டல் உலகத்திற்கு கூகுளின் பங்களிப்பு மிக அதிகமாகும். படிப்படியாக அது ஆன்ட்ராய்டில் காலடி எடுத்து வைத்தது. இப்போது அந்த ஆன்ட்ராய்டு தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய ஒரு புதிய டேப்லட்டை களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறது. அந்த மடிக்கணினிடின் படத்தை கூகுள் வெளியிட்டிருக்கிறது.
ஆனால் இந்த மடிக்கணினி எப்போது சந்தைக்கு வரும் என்பது அறிவிக்கப்படவில்லை. ஆனால் அந்த மடிக்கணினிடின் பெயர் நெக்சஸ் டேப் என்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அது நவீன தொழில் நுட்பங்களுடன் வரும் என்றும் தெரிகிறது.
குறிப்பாக, இந்த மடிக்கணினிடுக்கான புதிய வெர்சன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்குவதில் கூகுள் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த புதிய மடிக்கணினி க்வாட்-கோர் என்விஐடிஐஏ டெக்ரா 2 பிராசஸர் கொண்டு வரும் எனத் தெரிகிறது.
எனவே,இதன் செயல் திறன் மிக அபாரமாக இருக்கும். மேலும் இது ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்குதளத்தைக் கொண்டு வருவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மடிக்கணினிடின் ஆன்ட்ராய்டு இயங்குதளம் மல்டி டாஸ்க் செய்வதற்கும் பெரும் உதவியாக இருக்கும். தவிர, தகவல் பரிமாற்றம் செய்யவும் மற்றும் உரையாடலுக்கும் தகுந்த மடிக்கணினிடாக இது இருக்கும். இதன் யூசர் இன்டர்பேஸ் மூலம் இந்த மடிக்கணினிடை மிக எளிதாக இயக்கலாம். மேலும் இந்த மடிக்கணினிடில் கூகுள் க்ளவுட் வசதிகளையும் வழங்க இருக்கிறது.
ஏராளமான நிறுவனங்கள்  மடிக்கணினிடுகளைத் தயாரிப்பதில் அதிக முனைப்பு காட்டுகின்றன. எனவே, இந்த புதிய மடிக்கணினிடைக் கொண்டு வர கூகுள் வேறு  ஒரு நிறுவனத்துடன் கைகோர்க்கும் என்று தெரிகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை
Posted in: , , , | Saturday, November 26, 2011

ரஜினி நடித்த சுல்தான் தி வாரியர் அனிமேஷன் படம் கோச்சடையான் என்ற பெயரில் புதிய படமாக உருவாகிறது. ரஜினி நடிக்கும் காட்சிகளில் அனிமேஷன் சர்க்கப்பட்டு 3டிதொழில்நுட்பத்தில் தயாராகும் இப்படம் வரும் ஆகஸ்ட்டில் ரிலீசாகிறது.
இதற்கு பிறகு ராணா ஷூட்டிங் தொடங்குகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ராணா படம் அறிவிக்கப்பட்டது. தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனது. கடந்த ஏப்ரலில் இதன் ஷூட்டிங்கில் பங்கேற்ற ரஜினிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று திரும்பினார். குறைந்தபட்சம் 6 மாதமாவது ரஜினிகாந்த் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை கூறி இருந்தனர்

ராணா சரித்திர பின்னணியுள்ள படம் என்பதால் குதிரை ஏற்றம், வாள் சண்டை உள்ளிட்ட காட்சிகளில் ரஜினி நடிக்க வேண்டி இருந்தது. சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் அவரை ரிஸ்க்கான பணிகளில் ஈடுபடுத்த இயக்குனர் ரவிகுமார் விரும்பவில்லை. இதற்கிடையில், ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா ஏற்கனவே 3டி தொழில்நுட்பத்தில் சுல்தான் தி வாரியர் என்ற அனிமேஷன் படம் இயக்கி வந்தார்

பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்து, இறுதிகட்ட பணிகள் நடந்து வந்தன. இப்படத்தின் ஸ்கிரிப்ட், இயக்கம் பணிகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பை இயக்குனர் ரவிகுமாரிடம் ஒப்படைத்திருந்தார் ரஜினி. இதற்கிடையில் ரஜினியின் உடல்நிலை கருதி ராணா ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போனதால் ஹீரோயின் தீபிகா படுகோன் அதிருப்தி அடைந்தார். நேற்று அவர் அளித்த பேட்டியில் ராணா ஷூட்டிங் பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. கால்ஷீட்டும் கேட்கவில்லை என்று கூறியதுடன் வரிசையாக இந்தி படங்களில் நடிப்பதால் ராணாவில் இருந்து விலகும் முடிவையும் அறிவித்தார். இது ராணா குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று மாலை ரஜினியின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. கோச்சடையான் என்று படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரஜினி நடிக்கும் காட்சிகளை பதிவு செய்து பின்னர் அனிமேஷன் சேர்த்து 3டி படமாக இது உருவாகிறது.

 இந்த படத்துக்கு பிறகு ராணாவில் ரஜினி நடிப்பார் என ஈராஸ் நிறுவனமும் சவுந்தர்யாவும் தெரிவித்துள்ளனர்.
Posted in: |

முன்னணி காமெடியனான விவேக் வில்லன் வேடத்துக்கு மாறியுள்ளார்.

தமிழ், கன்னட மொழிகளில் தயாராகும் வழிப்போக்கன் என்ற படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார். இது அவரது முதல் வில்லன் வேட படமாகும்.

பெங்களூரில் நடந்த இந்த படத்தின் பூஜையில் பங்கேற்ற பின் விவேக் கூறுகையில், "வழிப்போக்கன் படம் கன்னடம், தமிழ் மொழிகளில் தயாராகிறது.

இது எனது முதல் கன்னட படம். இப்படத்தில் நான் வில்லனாக படம் முழுக்க வருகிறேன். கிளைமாக்சில் எனது வில்லத்தனம் வெளிப்படும்.
Posted in: |