ரஜினியின் அனிமேஷன் படமான கோச்சடையான் முடிந்ததும், சஞ்சய் தத்தை வைத்து ஒரு இந்திப் படம் இயக்குவதாகவும், அதன் பிறகே ராணா இயக்குவேன் என்றும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
ராணா படத்தில் நிறைய சண்டை காட்சிகளும், சாகசங்கள் நிறைந்த குதிரை சவாரி காட்சிகளும் இருப்பதால், அவருடைய உடல் நலனை கருதி, அந்த படம் தள்ளிப் போடப்பட்டுள்ளது.
ஜனவரி 15-ந் தேதிக்கு மேல் கோச்சடையான் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம். மார்ச் மாதத்துக்குள் படப்பிடிப்பை முடித்து விடுவோம்.
அதன்பிறகு, நான் ஒரு முதன்முதலாக இந்தி படத்தை இயக்குகிறேன். அந்த படத்தில், சஞ்சய்தத் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தி படம் முடிவடைந்த பின், ரஜினி நடிக்க 'ராணா' படத்தை இயக்குவேன், என்று உறுதி அளித்துள்ளார்.
அதன்பிறகு, நான் ஒரு முதன்முதலாக இந்தி படத்தை இயக்குகிறேன். அந்த படத்தில், சஞ்சய்தத் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தி படம் முடிவடைந்த பின், ரஜினி நடிக்க 'ராணா' படத்தை இயக்குவேன், என்று உறுதி அளித்துள்ளார்.
0 comments for "ராணா படத்தை இயக்குவேன் கே.எஸ்.ரவிக்குமார் உறுதி!"