பெண்களின் பாதுகாப்பு, கூட்டமில்லாத நிலை காரணமாக தமிழக திரையரங்குகளில் இனி இரவு காட்சியை ரத்து செய்ய திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் நகரங்களில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில், தினமும் 4 காட்சிகள் நடத்தப்படுகின்றன. காலை காட்சி 12 மணிக்கும், பகல் காட்சி 3 மணிக்கும், மாலை காட்சி 6-30 அல்லது 7 மணிக்கும், இரவு காட்சி 10 அல்லது 10-30 மணிக்கும் நடத்தப்படுகின்றன. நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் பிற்பகல் 2-30, மாலை 6-30, இரவு 10-30 என தினமும் 3 காட்சிகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாடு முழுவதும் நகரங்களில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில், தினமும் 4 காட்சிகள் நடத்தப்படுகின்றன. காலை காட்சி 12 மணிக்கும், பகல் காட்சி 3 மணிக்கும், மாலை காட்சி 6-30 அல்லது 7 மணிக்கும், இரவு காட்சி 10 அல்லது 10-30 மணிக்கும் நடத்தப்படுகின்றன. நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் பிற்பகல் 2-30, மாலை 6-30, இரவு 10-30 என தினமும் 3 காட்சிகள் நடத்தப்படுகின்றன.
பெங்களூரைப்போல் காட்சி நேரத்தை மாற்றி அமைப்பது பற்றியும் தியேட்டர் உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பெங்களூரில் காலை காட்சி 11 மணிக்கும், பகல் காட்சி 2 மணிக்கும், மாலை காட்சி 4 மணிக்கும், இரவு காட்சி 7 மணிக்கும் நடத்தப்படுகின்றன.
இதேபோல காட்சி நேரத்தை மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளதாக பல்வேறு திரையரங்க சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதேபோல காட்சி நேரத்தை மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளதாக பல்வேறு திரையரங்க சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
0 comments for "பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து தியேட்டர்களில் இரவு காட்சி ரத்து!"